Saturday, October 17, 2015

வறுமை நீங்க சொர்ண வைரவர் மந்திரம்

சிவனின் வைரவர் கலைகளான அசிதாங்கர், ருருவர், சண்டையர், குரோதர், கபாலர், உன்மத்தர், பீசணர், சங்காரர் ஆகிய எட்டு கலைகளும் சித்தர்களால் ஒருமுகப்படுத்தப்பட்டு வணங்கப்பட்டவரே சொர்ண வைரவர்.
இவர் இருளை நீக்கி ஒளியைதருபவர். சொர்ண வைரவரை வணங்கி பூஜித்தால் வாழ்வின் இருளாகிய துன்பம், வறுமை முதலியன நீங்கி ஒளியான மகிழ்ச்சி, செல்வம் முதலியன பெருகும் என்பது ஐதீகம்.

சொர்ணவைரவர் மந்திரம் :- ஹரி ஓம் றீங் நவகோடி சொர்ணவைரவா வாவா ஐயும் கிலியும் சௌவும் சதா காலமும் என் முன் நிற்க சுவாஹா.

கிரியை :- வெற்றிலை, பாக்கு, பழம், இளநீர், வடை என்பன வைத்து  காலை 1008 உரு மாலை 1008 உரு வீதம் 48 நாட்கள் பூஜிக்கவும். இதனால் வறுமை நீங்கும், உலகில் செல்வாக்கு மேன்மைபடும்.